districts

img

ரூ.100 கோடியில் கட்டியும் பயன்படுத்த முடியாத கடலூர் புதிய துறைமுகம்

கடலூர்,ஆக 7- கடலூர் மாவட்டத்தில் நல்லவாடு  துவங்கி, தாழங்குடா, தேவனாம் பட்டினம், அக்கரை கோரி,  சோனங்குப்பம், சொத்திகுப்பம், சித்திரை பேட்டை, அன்னப்பன் பேட்டை, அய்யம்பேட்டை, பெரிய குப்பம், சாமியார் பேட்டை, நஞ்ச லிங்கம் பேட்டை என்று 49 மீனவ கிரா மங்கள் உள்ளன.

 இந்த கிராம மீனவர்கள் 1000 த்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள், கட்டுமரங்கள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 25 ஆயிரம் டன் மீன்கள் பிடித்து, உள்ளூர், வெளி  மாவட்டங்கள், வெளி மற்றும் மாநில ங்களுக்கு விற்பனை செய்து வருகின்ற னர்.

கடலூர் முதுநகரில் உள்ள மீன்பிடி  துறைமுகம் மிகவும் பழமையான துறைமுகங்களில் ஒன்றாகும். இங்கு விசைப் படகுகள் மற்றும் எஸ்.டி.பி படகுகள் நிறுத்தி வருகின்றனர். இட  நெருக்கடி காரணமாக, புயல் மற்றும் கடல் சீற்றத்தின் போது படகுகள் ஒன்றோடு ஒன்று இடித்து சேத மடைந்தும் வந்தது. இதையடுத்து, மீன்கள் கையாளுவதற்கு வசதியாக வும் அதன் அருகிலேயே அதாவது 500 மீட்டர் தூரத்தில் மீனவர் கட்டமைப்பு வளர்ச்சி நிதி (எப்ஐடிஎப்) ரூ. 100  கோடியில் புதிதாக மீன்பிடி துறை முகம் கட்டுவதற்கு அரசு ஒப்புதல் அளித்தது.

 ‘ப’ வடிவிலான இந்த மீன் இறங்கு தளத்தில் 300 விசைப் படகுகள், 600 சிறிய ரக நாட்டுப் படகுகளை நிறுத்த லாம். இது தவிர மீன்களை ஏலம் விடு தவற்காக 2 கூடங்கள், வலைப் பின்னு வதற்கும் சீரமைப்பதற்கும் 4 கூடங்கள், படகு அணையும் தளம், மீன் ஏல கூடங்கள், சோலார் வசதியுடன் மீன் உலர் களம், மீனவர்கள் ஓய்வு அறைகள்  கட்டப்பட்டுள்ளது. மேலும் படகு களுக்கு டீசல் நிரப்புவதற்கு வசதியாக 2 பங்குகள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த  துறைமுகத்தை கடந்த ஆண்டு மே மாதம் காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆனால், மீனவர்கள் பிடித்து வரும்  மீன்கள் இறக்க முடியாத நிலை உள்ளது. மீன்பிடி துறைமுகம் அருகே உப்பனாற்றில் படகுகள் வரும் அளவிற்கு ஆழப்படுத்தாதால், பெரிய விசைப் படகுகள் துறைமுகத்தில் அணைய முடியவில்லை. இதனால் ரூ. 100 கோடியில் அமைக்கப்பட்ட துறைமுகம் பயன்படுத்த முடியாமல் பயனற்று போய் உள்ளது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் வி. வைத்தி யலிங்கம் கூறும் போது, “குதிரை வாங்கியவர் சட்டை வாங்க முடியாத நிலையில் உள்ளது. காரணம், 500 மீட்டர் நீளம் உள்ள உப்பனாற்றை  ஆழப்படுத்தி தூர் வாராமல் உள்ள தால் பெரிய விசைப்படகுகள் வர முடிய வில்லை”என்றார்.

மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி. ஏழுமலை,“ புதிதாக கட்டப்பட்ட துறைமுகத்தி லிருந்து மீன்களை ஏற்றி இறக்க வாக னங்கள் வந்து போவதற்கு சாலை மிக  மோசமாக உள்ளது. புதிய மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலூர்- சிதம்பரம் சாலைக்கு வருவதற்கு 500  மீட்டர் தூரம் ஆக்கிரமிப்புகள் உள்ளது. அதை அகற்றி வாகன போக்குவரத் துக்கு இடையூறு இல்லாமல் சாலையை அமைக்க வேண்டும்” என்றார்.

பழைய துறைமுகத்தில் இருந்து புதி தாக கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகத் திற்கு செல்ல 500 மீட்டர்தான் இடை வெளி உள்ளது. அதில், ஆற்றில் படகில்  செல்ல போதிய அளவுக்கு ஆழம் இல்லை என்பதால் படகுகளை கொண்டு செல்ல மீனவர்கள் அச்சப்படு கின்றனர். எனவே, பழைய துறை முகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், படகுகள் ஒன்றை ஒன்று ஒட்டிக்கொண்டு நிறுத்தப்படுகிறது. மழைக்காலங்களில் அதிகமாக சேத மடைவதை தடுப்பதற்கு உப்ப னாற்றை தூர் வாரி, ரூ.100 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட மீன்பிடி துறைமுகம் விரைவில் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதே மாவட்ட மீனவர்கள் எதிர்பார்ப் பாகும்.

 - வ.சிவபாலன்