உதகை, ஜூலை 4- கனமழை மற்றும் காற்றால் 7 ஆயிரத் திற்கும் அதிகமான நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூட லூர் விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், உதகை, கூட லூர், பந்தலூர், நெலா கோட்டை தேவால முதுமலை பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, பெய்து வரும் மழையுடன், அவ்வப்போது பலத்த காற் றும் வீசி வருகிறது. இதன் காரணமாக மண்வயல், பாடந்துறை, புளியம் பாறை, மங்குழி, ஏழுமுரம், தேவர் சோலை உள்ளிட்ட பகுதிகளில் நேந்தி ரன் வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிக ளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள தால், கடனை திருப்பி செலுத்த முடியா மல் விவசாயிகள் கவலை அடைந்துள் ளனர். எனவே, அறுவடை செய்ய இருந்த நிலையில், மழையுடன் வீசிய காற்றால், ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி உள் ளது. நஷ்டத்தை ஈடு செய்ய அரசு, உடன டியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத் துள்ளனர்.