districts

img

போக்குவரத்திற்கு ஆதாரமான புதிய பாலம் கட்டுவது எப்போது

உதகை, ஜூன் 13 – கூடலூர் போக்குவரத்திற்கு ஆதார மான பழைய பாலம் இடிக்கப்பட்ட நிலையில் புதிய பாலம் கட்டுமானம்  ஆரம்பிக்கப்படாததால் அப்பகுதியி னர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலையும், தெப்பக்காடு வழியாக மசினகுடிக்கு சாலையும் செல்கிறது. இதில் தெப் பக்காடு-மசினகுடி இடையே மாயாறு  ஓடுகிறது. இதன் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான இரும்பு பாலம் இருந்தது. 

நாளடைவில் இந்த பாலம் மிகவும்  பழுதடைந்து வந்ததால் கனரக வாக னங்களை இயக்க தடை விதிக்கப்பட் டது. இதனால் புதியதாக கான்கிரீட் பாலம் கட்ட வேண்டும் என அனைத்து  தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் புதிய பாலம்  கட்டுவதற்காக ரூ.1.85 கோடி நிதி ஒதுக் கப்பட்டது. தொடர்ந்து ஆங்கிலேயர் கால இரும்பு பாலத்தை அகற்றும் பணி  நடைபெற்றது. இதன் காரணமாக முது மலை தெப்பக்காடு தரைப்பாலம் விடுதி  வழியாக மசினகுடிக்கு வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. பிப்ரவரி முதல்  வாரம் இரும்பு பாலம் முழுமையாக அகற்றப்பட்டது. இதனால், வனத்து றைக்கு சொந்தமான தரைப்பாலம் வழி யாக போக்குவரத்து திருப்பி விடப்பட் டது. 

\இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை மற்றும் வட கிழக்கு பருவ மழை  காலங்களில் தரைபாலம் வெள்ளத் தால் மூழ்கி விடுகிறது. இதன் காரண மாக போக்குவரத்து தடைப்படுகிறது. மாயாறு தரைப்பாலம் தான் மசினகுடி- கூடலூர் போக்குவரத்துக்கு ஆதாரம். ஆனால், தற்போது மாயாறு தரைப்பால மும் தண்ணீர் முழ்கி விடுவதால், போக் குவரத்து கடும் சவாலை ஏற்படுத்தி யுள்ளது. 

மேலும், கன ரக வாகன போக்குவரத் தால் இந்த தரைப்பாலமும் சேதமடைந்துள்ளது. 

எனவே, புதிய பாலம் கட்டுமானப் பணியை விரைந்து மேற்கொள்ள நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வாகன  ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

ஆனால், புதிய பாலத்தை கட்டுவதற் கானப் பணிகள் இதுவரை தொடங்கப்ப டாமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது. 

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறு கையில், ‘தெப்பக்காடு இரும்பு பாலம்  இடிக்கப்பட்டது. பாலம் கட்ட ஒப்பந்தப் புள்ளி கோரிய ஒப்பந்ததாரர் இடிக்கப் பட்ட இரும்பை விதிமுறை மீறி விற்று விட்டார். அதில் கிடைத்த பணத்தோடு அவர் பால கட்டுமானப் பணியை கிடப் பில் போட்டு விட்டு சென்று விட்டார்.  இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளது. ஒப்பந்ததாரர் மீது நெடுஞ்சாலைத் துறையினர் புகார் அளித்தனர். இந்த  பிரச்சினை தீர்க்கப்படாததால், பாலத் தின் கட்டுமானப்பணி தொடங்கப்பட வில்லை. பாலம் இடிக்கப்பட்டு ஓராண் டுக்கு மேலாகியும் கட்டுமாப்பணிகள் தொடங்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக கட்டுமானப்பணி நடந்து வருகிறது. தற்போது பாதி அளவிலான பணிகளே நிறைவடைந்துள்ளன. பருவ மழை காலம் தொடங்கும் நிலையில், கட்டுமானப்பணி மேலும் தாமதமாகும் என தெரிகிறது. பால கட் டுமானப்பணியை விரைவில் முடிக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.