districts

img

கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கு பாலை தரையில் ஊற்றி போராட்டம்

உதகை, ஜூன் 16- கொள்முதல் விலையை உயர்த்தி  வழங்க வேண்டும் என வலியுறுத்தி, உதகையில் பால் உற்பத்தியாளர்கள் தரையில் பாலை கொட்டி போராட் டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உதகையில்  காக்கா தோப்பு பால் உற்பத்தியாளர் கள் கூட்டுறவு சங்கத்தில் 160 பேர் உறுப் பினர்களாக உள்ளனர். இதில் தினசரி  1,150 லிட்டர் ஆவின் நிர்வாகத்திற்கும், 130 லிட்டர் பொதுமக்களுக்கும் விற் பனை செய்யப்படுகிறது. இந்நிலை யில், ஆவின் நிர்வாகத்தில் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி காந்தல் பகுதியில் பால் உற்பத்தியா ளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலை தரையில் கொட்டி முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து பால் உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு சங்க துணைத்தலை வர் சரவணன் கூறுகையில், ஆவின் நிர்வாகம் சார்பில் ஒரு லிட்டர் பால் ரூ.28க்கு கொள்முதல் செய்யப்பட்டு ரூ.40க்கு விற்கப்படுகிறது. கடந்த 5  வருடங்களாக இதே விலைக்கு கொள் முதல் செய்யப்படுகிறது. இதற்கி டையே கால்நடை தீவமான புண்ணாக்கு ஒரு மூட்டை 2 ஆயிரத்து 900 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. மேலும், வனப் பகுதிகளில் மேய்ச்சல் நிலம் குறைந்து விட்டதால், தீவன பற்றாக்குறை பிரச் சனை ஏற்பட்டுள்ளது. எனவே, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, இதுகுறித்து பல முறை அதிகாரிகளுக்கு தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. எனவே, இனி நடவ டிக்கை எடுக்காவிட்டால் நீலகிரி மாவட் டத்தில் உள்ள 71 பால் உற்பத்தியாளர் கள் சங்கங்கள் ஒன்றிணைத்து உதகை - குன்னூர் சாலையில் உள்ள ஆவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள் ளோம், என்றார்.