உதகை, ஆக.24- நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி யில் ரூ.30 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உயர்தர மருத்துவ வசதி இல்லாததால், இங் கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக கோவை மாவட்டம் மற்றும் கேரளா வுக்கு செல்லும் நிலை இருந்தது. இதையடுத்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டது. அதன்படி, உதகை எச்பிஎப் பகுதியில் கோல்ப் மைதான சாலைக் கும், கூடலூர் சாலைக்கும் இடையே வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக் கர் நிலமும், அருகில் கால்நடைத் துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நில மும் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு வரைபடத்துடன் அறிக்கை அனுப்பப் பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதைய டுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ரூ.447 கோடி மதிப்பில் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப் பட்டு வருகிறது. மலைப்பிரதேசம் என் பதால் பிற மாவட்டங்களை போல் இல்லாமல் உதகையில் கீழ் தளம் மற் றும் முதல் தளம் என்ற வடிவமைப் பில் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மருத் துவக்கல்லூரி அறிவிக்கப்பட்டது. இதில் நீலகிரியை தவிர திண்டுக் கல், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், அரியலூர் உட்பட எல்லா மாவட்டங் களிலும் பணிகள் முடிந்துவிட்டது. ஆனால், நீலகிரி, மலை மாவட்டம் என்பதாலும், 21 அடி உயரத்திற்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது என்ற விதிமுறை காரணத்தாலும் தற்போது வரை பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 மாதத்திற்குள் மருத்துவக் கல்லூரி பணிகள் முடிக்க பொதுப் பணித்துறையினர் திட்டமிட்டுள்ள னர். ஆனாலும், தற்போது மூன்றா வது மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், உத கையிலிருந்து கூடலூர் செல்லும் பிர தான சாலை, தற்போது புதிதாக கட் டப்படும் அரசு மருத்துவமனை மற் றும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு இடையில் செல்கிறது. இந்த சாலை யில் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் என் பதால், அரசு மருத்துவக்கல்லூரி மற் றும் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்தவுடன் இருபுறமும் தினசரி சாலையை கடப்பது சவாலான விஷயமாக இருக்கும் என்பதால் அந்த சாலை மீது உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை பொறியாளர் அய்யாசாமி கூறு கையில், உதகையிலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் எச்பிஎப் பகுதி யில் இடதுபுறத்தில் அரசு மருத்துவ மனையும், வலதுபுறத்தில் குடியி ருப்பு மற்றும் அரசு மருத்துவக்கல் லூரி கட்டிடங்களும் இருக்கிறது. இடதுபுறம் அரசு மருத்துவமனை உள்ள இடம் வனத்துறைக்கு சொந்த மானது. அங்கு நமக்கு 25 ஆண்டு கால குத்தகைக்கு மட்டும் தான் இடம் கிடைத்துள்ளது. அந்த இடத்திலிருந்து எதிர்புறம் உள்ள குடியிருப்பு மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டடங்க ளுக்கு 2 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். மேலும், தினசரி அந்த சாலையில் ஆயிரக்கணக்கான வாக னங்கள் செல்லும் என்பதால், ரூ.30 கோடி செலவில் 400 மீட்டர் தூரம் மற் றும் 11 மீட்டர் உயரத்தில் கூடலூர் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத் ததும் டெண்டர் விடப்பட்டு நெடுஞ் சாலைத்துறை மூலம் விரைவில் பணி கள் தொடங்கும், என்றார்.