வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
உதகை, மார்ச்.1- பழங்குடியின மாணவர்களுக்காக கட்டப்பட்ட உண்டு உறைவிடப்பள்ளி, ஏழாண்டுகள் கடந்தும் இதுவரை திறக்கப் படாததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெ ழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். கூடலூரையடுத்த பந்தலூர் தேவாலா பகுதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியின மாணவர்க ளுக்காக உண்டு உறைவிடப்பள்ளி கட்டப்பட் டது. சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த கட்டடம் ஏழு ஆண்டுகள் கடந்தும் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வில்லை. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பந்தலூர் ஏரியா கமிட்டி யின் சார்பில் தொடர்ந்து அதிகாரிகளிடம் வலி யுறுத்தப்பட்டது.
இருப்பினும் பள்ளியை திறப் பதற்கான எந்த முயற்சியையும் மாவட்ட நிர் வாகம், உள்ளாட்சி நிர்வாகம் மேற்கொள்ளப் படவில்லை. இதனைத்தொடர்ந்து, பழங்குடியின மாணவர்களின் முன்னேற்றத்திற்காக கோடிக் கணக்கான ரூபாய் செலவு செய்து கட்டப் டும் கட்டடங்கள் திறக்கப்படாமல் அலட்சி யப்படுத்தும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித் தும், அரசு உடனடியாக தலையிட வலியுறுத் தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் வெள்ளியன்று தேவாலா பஜார் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உடனடியாக பள்ளியை திறக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். வாலிபர் சங்கத்தின் முன்னெடுப் புக்கு அப்பகுதியில் உள்ள ஏராளமான மக் கள் கையெழுத்திட்டு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். முன்னதாக இவ்வியக்கத்திற்கு, வாலிபர் சங்க பந்தலூர் ஏரியாக் கமிட்டி செயலாளர் இராசி இரவிக்குமார் தலைமையேற்றார்.
இதில், ஏரியாக் கமிட்டி தலைவர் பெரியார் மணிகண்டன், பொருளாளர் செரீப், துணைத் தலைவர் ஹைசைன், கமிட்டி உறுப்பினர் ரெஜிதா உள்ளிட்ட திரளான வாலிபர் சங்கத் தினர் பங்கேற்றனர். முன்னதாக வாலிபர் சங் கத்தின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக்குழு உறுப்பினர் வர்க்கீஸ், தேவாலா கிளைசெயலாளர் சாஜி ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினார்.