districts

img

உலக சாதனை படைத்த உடுமலை சிறுவன்

உடுமலை, மே 28- உடுமலையைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன்  விதுஷன் ,  உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத் துள்ளார். திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை சேரன்நகர் பகுதியைச் சேர்ந்த ஜான்பால் - கவுதமி தம்பதிகளின் மகன் விதுஷன்  இவர் விண்வெளி, கோள்கள் மற்றும் ராக்கெட் குறித்த 50 கேள்விகளுக்குக் குறைந்த நேரத்தில் பதிலளித்து, உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள் ளார். இதற்காக, சென்னையில் நடைடெற்ற உலக சாதனை யாளர்களை கௌரவிக்கும் விழாவில், விதுஷனுக்கு தங்கப் பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இதுதவிர, 60  தமிழ் வருடங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நுால்கள், ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை சரளமாக கூறி  அசத்தினார். இதுகுறித்து விதுஷனின் பெற்றோர் கூறுகை யில், தற்போது, வாரத்தின் நாட்கள், மாதங்கள்,வீட்டு உபயோ கப் பொருட்கள், வாகனங்கள், கணித வடிவங்கள், வண் ணங்கள் மற்றும் விலங்குகளின் பெயர்கள் அனைத்தை யும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூறி வருகிறார். குறிப்பாக, 3 வயதில் 60 தமிழ் வருடங்களை 1 நிமிடம் 6 விநாடிகளில் கூறி இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார், என்றனர்.