உடுமலை, ஜூன் 13 - உடுமலைபேட்டை ஊராட்சி ஒன்றியத்தை நிர்வாக வசதிக்காக உடுமலை மற்றும் எரிசனம்பட்டி தலைமையில் இரு ஊராட்சி ஒன்றி யங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நடை முறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் இதை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலேயே பெரிய ஊராட்சி ஒன்றியமாக உடும லைபேட்டை ஒன்றியம் உள்ளது. இந்த ஒன்றியத்தை நிர்வாக வசதிக் கும், ஊராட்சிகளின் வளர்ச்சியை வேகப்படுத்தவும் இரண்டு ஊராட்சி ஒன்றியங்களாகப் பிரிக்க வேண் டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்க ளாக உள்ளது. இதற்கு ஏற்ப பல ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்கள், அரசியல் கட்சிகளின் கருத்து கேட்பு கூட்டம் கடந்த 2104 இல் நடத்தப்பட்டது. இதில் இரண் டாகப் பிரிக்கலாம் என சுமூகமாக ஒப் புதல் பெறப்பட்டது. எனினும் இத் திட்டம் தற்பொழுது வரை நடை முறை படுத்தாமல் உள்ளது. இத னால் மக்களுக்கு சென்றடைய வேண்டிய வளர்ச்சி பணிகள் பாதி கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. ஒன்றுபட்ட கோவை மாவட்டத் தில் உடுமலை ஊராட்சி ஒன்றியம் கடந்த 1962ஆம் ஆண்டு உருவாக் கப்பட்டது. இதில் 38 ஊராட்சிகள் 110க்கும் மேற்பட்ட சிறிய கிராமங் கள் மற்றும் மலைவாழ் மக்கள் குடி யிருப்புகளும் உள்ளன.
இதில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ளது. அதிக பரப்பளவும் உள்ளதால், நிர்வாக நடைமுறைக்கும் ஒன்றிய பொது நிதி அனைத்து பகுதிகளுக்கும் பரவ லாக பகிர்ந்தளிக்கவும், மேற்கு பகு தியான எரிசனம்பட்டியை தலைமை யிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றி யம் உருவாக்கலாம் என்பது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப் பட்டது. இதன்படி எரிசனம்பட்டியைத் தலைமையிடமாக கொண்ட ஒன்றி யத்தில் தேவனூர்புதூர், செல்லப் பாளையம், புங்கமுத்தூர், ராவணா புரம், எரிசனம்பட்டி, உடுக்கம்பா ளையம், பாப்பனூத்து,கொடுக்கி யம், தின்னப்பட்டி, அந்தியூர், பூலாங்கிணறு, கணபதிபாளையம், ஆர்.வேலூர், வடபூதிநத்தம், பெரிய வளவாடி, ரெட்டிபாளையம், தீபாலபட்டி, ஜிலேப்பிநாயக்கன் பாளையம், மொடக்குபட்டி, ராகல் பாவி என இருபது ஊராட்சிகள் மற் றும் நாற்பது சிறிய கிராமங்கள் ஒன் பது ஒன்றிய கவுன்சிலர் வார்டுக ளும் இடம் பெறும். அதேபோல் உடுமலை ஒன்றி யத்தில் குறிச்சேரி, சின்ன வீரம்பட்டி, பெரியகோட்டை, போடிபட்டி, கணக்கம்பாளையம், கண்ணமநா யக்கனூர், பள்ளபாளையம், குரல் குட்டை, ஆலாம்பாளையம், ஜல்லி பட்டி, குறிச்சிகோட்டை, குருவப்ப நாயக்கனூர், துப்பலப்பட்டி, ஆண் டியகவுண்டனூர், சின்ன குமாரபா ளையம், மனுப்பட்டி, எலையமுத் தூர், கல்லாபுரம் என 18 ஊராட்சி கள் மற்றும் 74 சிறிய கிராமங்கள் 17 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள் இடம் பெறும். இந்த அடிப்படையில் பிரிப்பது என கடந்த 2014ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத் தில் செயல் திட்ட அறிக்கையை, உடு மலை ஒன்றிய கூட்டத்தில் ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அறிக்கை தரப்பட்டது. ஆனால் உடுமலை ஒன்றிய பிரிப்பு என்பது இன்று வரை நடைமுறைபடுத்தப் படாமல் உள்ளது. நிர்வாக நடைமுறைக்கும், கிரா மங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் வகையில் இருக்கும் உடு மலை ஒன்றிய பிரிப்பு செயல்முறை யை இன்னும் காலம் தாழ்த்தாமல் செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்து கின்றனர். (ந.நி)