உடுமலை, ஜூன் 12- மலைவாழ் மக்களின் குழந்தை கள் ஆரம்பக்கல்வி கற்க அரசின் சார்பில் மக்களின் குடியிருப்பு பகு தியில் ஆரம்பப்பள்ளிகள் அமைத் துள்ளது. இப்பள்ளி கட்டடங்கள் முறையாக பராமரிப்பு இல்லாத தால் கட்டிடங்கள் சிதலமடைந்துள் ளது. மேலும், ஆசிரியர்கள் வருகை உறுதியில்லாத காரணத்தால் மலைவாழ் மக்களின் குழந்தைக ளின் கல்வி முழுமையாக மறுக்கபடுகிறது.
உடுமலை தாலுகா, திருமூர்த்தி மலை, மேல்குருமலை, கீழ்குரு மலை, குழிபட்டி, மாவடாப்பு மற்றும் பூச்சிக்கொட்டாம்பாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகி றார்கள். இம்மக்களின் குழந்தை கள் ஆரம்ப கல்வி கற்க திருமூர்த்திமலை, கீழ்குருமலை, குழிபட்டி மற்றும் மாவடாப்பு பகுதியில் அரசு சார்பில் பள்ளிகட் டிடம் கட்டப்பட்டுவுள்ளது. திரு மூர்த்திமலை தவிர மற்ற மூன்று இடங்களில் இருக்கும் பள்ளிக் கூடம் மலைபகுதியில் உள்ளது. இங்கு வேலைக்கு வரும் ஆசிரி யர்கள் அந்த பள்ளிகட்டிடத்தில் தான் தங்கி வேலை செய்ய வேண் டும் மேலும் ஆசிரியர்கள் தங்குவ தற்கு தனியாக பள்ளியின் அருகில் கட்டிடம் உள்ளது. ஆனால் இந்த பள்ளிக்கு பல வருடங்கள் பெய ருக்கு மட்டுமே மாதம் ஒரு முறை ஆசிரியர்கள் வருவதாகவும் அவர் கள் மாணவர்களுக்கு கல்வி கற்று தருவது இல்லை என்று மலைவாழ் மக்கள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், எங்கள் குடியிருப்பு பகுதியில் தமி ழக அரசின் சார்பில் மூன்று ஆரம்ப பள்ளிகள் உள்ளது. இந்த கட்டி டங்கள் முறையாக பராமரிப்பது இல்லை, மிகவும் சிதமலைடைந்து தான் உள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. பல முறை அதிகாரிக ளுக்கு புகார் தெரிவித்த நிலையில் கடந்த ஆண்டு உடுமலை ஒன்றிய அலுவலத்தில் இருந்து பொறி யாளர் சுப்பிரமணி மற்றும் அதிகாரி கள் மழைக்கு இடிந்த குழிபட்டி பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்ய வந்தார்கள் அப்போது மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் இது போன்று கீழ் குருமலையில் பள்ளி கட்டிடம் மிகவும் ஆபத் தான நிலையில் உள்ளது என்றும் அந்த கட்டிடத்தையும் ஆய்வு செய்ய கோரிக்கை வைத்துவுள் ளார்கள். எதையும் கண்டு கொள்ளா மல் மாவடாப்பு பகுதிக்கு சென்ற வர்கள் தான் தற்பொழுது வரை பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் இந்த மூன்று பள்ளிக ளுக்கும் தனித்தனியாக ஆசிரி யர்கள் உள்ளார்கள். இங்கு தின மும் தங்கி வேலை செய்ய வேண்டிய ஆசிரியர்கள் தங்க இடம் இல்லாமல் பெரும் துன்பத்தில் வேலை செய்து வருகிறார்கள். அங்கு படிக்கும் அனைத்து குழந் தைகளும் முறையாக கல்வி கற் காமல் ஆரம்பக்கல்வி முடித்து ஆறாம் வகுப்பு வேறு பள்ளிக்கு குழந்தைகள் செல்லும் போது அவர்களால் கல்வி கற்க முடிவதி இல்லை இதனால் படிப்பை தொடர முடியாமல் விட்டுவிடுகிறோம் என்றார்கள். மலைவாழ் மக்களின் உரிமைகளை பறித்து பல ஆண்டு கள் வாழ்ந்த நிலையில் தற்பொழுது மலைவாழ் மக்கள் சங்கத்தின் பல போராட்டங்கள் நடத்தியதால் மலை பொருட்கள் மற்றும் விவசாயம் செய்ய தற்பொழுதுதான் வனப் பட்டா தரப்பட்டது.
இந்த நிலையில் வரும் தலை முறையினர் கல்வி கற்க அரசு அனைத்து வசதிகளும் செய்த நிலையில் தரமான பள்ளி கட்டிடம் மற்றும் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்து முறையாக கல்வி கற்றுத்தர வேண்டும் என்பதே இம்மக்களின் கோரிக்கையாக உள்ளது.