ஈரோடு, செப்.7- வரலாற்றுச் சிறப்பு மிக்க வாச் சாத்தி தீர்ப்பின் அனைத்து அம்சங்க ளையும் தமிழ்நாடு அரசு நிறை வேற்ற வேண்டுமென பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம், வெள்ளியன்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந் தித்தார். அப்போது இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
வாச்சாத்தி வழக்கில், கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வந்தது. தீர்ப்பின் இறுதிப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, அந்த கிராம மக்களுக்கு செய்ய வேண்டிய பல அம்சங்கள், உத்தரவுகள் தமிழக அரசால் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. தீர்ப்பு வந்து ஏறத்தாழ ஒரு வருடம் ஆகப்போகிறது.
வாழ்வாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் வகுக்கப்படவில்லை!
பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங் கப்பட்டிருக்கிறது. அதற்காக தமிழக அரசை பாராட்டுகிறோம். அதேநேரத் தில் அவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது நிறைவேற்றப்படவில்லை.
அடுத்து, அந்த கிராம மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை மேம் படுத்துவதற்கான திட்டங்களை தமிழ் நாடு அரசு உருவாக்கி, அதை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதுகுறித்து பல்வேறு உயர் அதிகாரி களையும், முதலமைச்சரையும் சந் தித்த பிறகும், அதற்கான நடவடிக்கை கள் எடுக்கப்படாமல் இருப்பது பொருத்தமில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
மேலும், அப்போது பொறுப்பில் இருந்த காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தீர்ப்பின் மற்றொரு அம்சம். அந்த சம்பவத்தில் பழங்குடியினர் அல்லாத 18 குடும்பத்தினர் அங்கே இருக்கின்றனர். அவர்களும் சிறை யில் இருந்தனர், கடுமையான பொருட்சேதம் ஏற்பட்டது. எனவே, அவர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
வனக்கொள்கை கமிட்டியில் மலைவாழ் மக்கள் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் அவசியம்
அதேபோல, தமிழ்நாடு அரசு புதிய வனக்கொள்கையை உரு வாக்க கமிட்டி அமைப்பதாக அறி வித்திருக்கிறது. அதை நாங்கள் வர வேற்கிறோம். ஆனால், அந்த கமிட்டி யில் மலைவாழ் மக்கள் மத்தியில் பணி யாற்றக்கூடிய, மலைவாழ் மக்கள் நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். அதுதான் உண்மை யான மக்கள் நலனையும் உள்ளடக் கிய வனக் கொள்கையை உருவாக்க உதவி செய்யும். ஆனால் அவர்களின் அறிவிப்பில் சுற்றுச் சூழல் ஆய்வாளர் கள், வனம் சம்பந்தமான ஆய்வா ளர்கள், வனத்துறை அதிகாரிகள் இடம் பெறும் வகையிலான அறிவிப் பாக இருக்கிறது. ஆக, அது முழுக்க முழுக்க மக்களுக்கு எதிராகப் போய் நிற்கும். அது அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும் மாறி விடும். எனவே, புதிய வனக் கொள் கையை உருவாக்குவதற்கு மக்களின் பிரதிநிதிகள் இடம் பெறுவது அவசி யம். அதில், தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கத்திற்கு உரிய பிரதிநிதித்து வம் தர வேண்டும்.
இவ்வாறு பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த பேட்டியின் போது, கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர். ரகு ராமன், செயற்குழு உறுப்பினர்கள் ப. மாரிமுத்து, ஜி. பழனிசாமி உள்ளிள் டோர் உடனிருந்தனர்.
சிபிஎம் மாவட்டக் குழுவின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகம்!
பிரகாஷ் காரத் திறந்து வைக்கிறார்
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட ஈரோடு மாவட்டக்குழு அலுவல கம் செப்டம்பர் 12 அன்று திறக்கப் பட உள்ளது. இந்த கட்டடத்தை கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் திறந்து வைக்கிறார். கூட்ட அரங்கை கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் திறந்து வைக்கிறார். அதே நாளில், சம்பத் நகர் - நசியனூர் பிரிவு சாலையில் பல ஆயிரக்க ணக்கானோர் பங்கேற்கும் மாபெ ரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது” என்றும் பெ. சண்முகம் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.