districts

img

ஞாபகமறதி அதிகம் இருப்பதால் எனக்கு வாழ பிடிக்கவில்லை; பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு  

கோபிசெட்டிபாளையம் அருகே ஞாபகமறதி அதிகம் இருப்பதால் எனக்கு வாழ பிடிக்கவில்லை என 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள குமரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகள் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இந்தநிலையில் கடந்த 3 ஆம் தேதி மாணவி வீட்டில் இருந்தபோது மாத்திரை ஒன்றை சாப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை கேட்டபோது என்னால் சரிவர படிக்க முடியவில்லை. ஞாபகமறதி அதிகம் இருப்பதால் எனக்கு வாழ பிடிக்கவில்லை என கூறியபடி திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தன்மீது ஊற்றி தீ வைத்து கொண்டார்.  

பின்னர் சூடு தாங்காமல் அலறிய தன் மகளை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அதனைதொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.  இந்த சம்பவம் குறித்து பங்களாப்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

;