districts

கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்

ஈரோடு, பிப்.10- ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சென்னிமலை, சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விசைத்தறிகள் மற்றும் கைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு தேவையான பட்டு நூல் மற்றும் கச்சாப் பொருட்களை பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து கொள்முதல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் பட்டு நூல் மற்றும் கச்சா பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பட்டு நூல் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரத்து 500 வரை விற்பனையாகி வருகிறது. இதனால் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.இதையடுத்து நூல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டத்தை துவக்கியிருக்கிறார்கள்.

;