districts

img

மீனவர் போராட்ட அறிவிப்பு எதிரொலி: அரசானை வெளியிட்டது மீன்வளத்துறை

ஈரோடு, ஜூலை 16- உள்நாட்டு மீனவர்களின் வாழ் வாதாரத்தை சீர்குலைக்கும் நோக் கத்தோடு கொண்டு வரப்பட்ட அறி விப்பை திரும்பப்பெற தொடர் காத் திருப்பு போராட்டத்தை மீனவர் சங் கங்கள் அறிவித்த நிலையில், உள் நாட்டு மீனவர் நலன் காக்கும் அர சானையை மீன் வளத்துறை வெளி யிட்டுள்ளது மீனவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறை, மீன்வளத்துறை, வருவாய்த் துறை மற்றும் அனைத்து அரசுத்  துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள  ஏரி, குளம், அணைகளில் மீன்பி டித்து வாழ்க்கை நடத்தும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்கும் பொருட்டு,  மேற்படி நீர்நிலைகளில் மீன் பிடிக் கும் உரிமையை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்குத்தான் வழங்க வேண்டும், தனியார் ஏலம் விடக்கூடாது என்று கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மீனவர் சங்கங்கள் போராடி வருகின்றன. 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு சங் கம் தான் இதற்கான முதல் முயற் சியை துவக்கி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. தொடர்ந்து தமிழகம் முழுதும் இருந்து 35 க்கும் மேற்பட்ட மீனவர்  கூட்டுறவு சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை தாக் கல் செய்தன. இதனை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து. கடந் தாண்டு (2023) சென்னை உயர்நீதி மன்றம் தமிழ்நாட்டில் அரசு துறைக ளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி,  குளம், அணைகளில் மீன்பிடிக்கும் குத்தகைக்கான உரிமை உள்நாட்டு  மீனவர் கூட்டுறவு சங்கங்களுக் குத்தான் முன்னுரிமை அடிப்படை யில் வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது.

இந்த வழக்கின் விசாரணை யில், மீனவர்கள் சார்பாக சென்னை  உயர்நீதிமன்றத்தில் மூத்தவழக்க றிஞர் சிகரம் ச.செந்தில்நாதனும், சண்முகசுந்தரம் செந்தில்நாதனும் மிகவும் திறம்பட வாதாடி மகத்தான  வெற்றியைத் தேடித்தந்தனர். உள் நாட்டு மீனர்வர்கள் வாழ்வை பாது காக்க அச்சாணியாக இருந்தனர்.

மேற்படி தீர்ப்பின் அடிப்படை யில் மீன்வளத்துறை உடனடியாக அரசாணை வெளியிட்டு மீன்பாசி  குத்தகையை மீனவர் கூட்டுறவு  சங்கங்களிடம் வசூலிக்க வேண்டும்  என்று தொடர்ந்து மீனவர் சங்க பிர திநிதிகள் மீன்வளத்துறை உயர்  அதிகாரிகளை சந்தித்து முறை யிட்ட வண்ணம் இருந்தனர். இந்த  சந்திப்புகளுக்கு தலைமைச் செய லகம் அளவில் அந்தியூர் சட்டமன்ற  உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், கீழ்வேளூர் சிபிஐ(எம்) சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி ஆகியோர்  பக்கபலமாக இருந்து மீனவர்க ளுக்கு உடன் சென்று உதவிகளை செய்தனர்.

இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பு, இத்தகு பெரும் முறையீடு களுக்கு பிறகும் மீன்வளத்துறை அரசாணை வெளியிட தாமதம் செய்த காரணத்தால், அரசாணை வெளியிடும் வரையில் பவானிசா கர் அணை மீன்வள துணை இயக்கு நர் அலுவலகம் முன்பு தமிழகம் முழுவதும் இருந்து உள்நாட்டு மீன வர்களை திரட்டி தமிழ்நாடு மீன்பிடி  தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐ டியு) சார்பில் “காத்திருக்கும் போராட்டத்தை” நடத்துவது என்று  அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னணியில் தான் மீன் வளத்துறை சார்பில் கடந்த  9 ஆம் தேதி மீனவர் கூட்டுறவு  சங்கங்களிடம் மீன்பாசி குத்தகை யைப்பெற அரசாணை வெளியி டப்பட்டது. அரசாணை வெளியி டப்பட்டதால் பவானிசாகரில் நடை பெற இருந்த போராட்டம் தற்காலிக மாக ஒத்திவைக்கப்பட்டு, போராட்ட வெற்றி நிகழ்வாக பவா னிசாகரில் நூற்றுக்கணக்கான மீன வர்கள் பங்கேற்ற சிறப்புப் பேரவை  கூட்டம் நடைபெற்றது.

இந்த சிறப்புப் பேரவை கூட்டத் திற்கு த.மீ.பி.தொழிற்சங்க கூட்ட மைப்பின் மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.கே.பழனிச்சாமி தலைமை தாங்கினார். அந்தியூர், பவானிசா கர், சிறுமுகை, கோவை, பி.மேட் டுப்பாளயம், செம்படாபாளையம் உள்ளிட்ட மீனவர் கூட்டுறவு சங் கங்களின் தலைவர்கள் மற்றும் நிர் வாகிகள் முன்னிலை வகித்தனர்.  சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். சுப்ரமணியன், தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டச் செயலாளர் ப.மாரி முத்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் ஆர்.விஜயராகவன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் பி.பி.பழனிச் சாமி, பொதுப்பணித்துறை அலுவர்  சங்கத்தின் முன்னாள் தலைவர்  காசிவிஸ்வநாதன், மாற்றுத்திற னாளிகள் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.சுப்பிர மணி, அந்தியூர் தாலுக்கா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆர்.முருகேசன் ஆகி யோர் பேரவையில் பங்கேற்று ஒன் றுபட்டு உறுதியாக போராடி வெற்றி பெற்ற மீனவர்களை வாழ்த்தி பேசி னர்.

முன்னதாக, சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில் அரசு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளி லும் மீன்பிடிக்கும் உரிமை உள் நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங் களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும், பவா னிசாகர் உள்ளிட்ட சில அணைக ளுக்கு இந்தத்தீர்ப்பு பொருந்தாது  என்று தற்போது வெளியிடப்பட் டுள்ள அரசாணையில் மறுக்கப்பட் டுள்ளது சரியானதல்ல. எனவே பவானிசாகர் அணை உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் மீன்பி டிக்கும் உரிமையை மீனவர் கூட்டு றவு சங்கங்களுக்கே வழங்க வேண் டும். பவானிசாகர் அணையில் மீன வர் கூட்டுறவு சங்கங்கங்களுக்கு மீன்பிடி உரிமை வழங்கப்படாத பட் சத்தில் சட்டப்படியாகவும், ஜனநா யகப்படியாகவும் தொடர்ந்து போராடுவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.