ஈரோடு, செப்.16- பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 74 அடியாக சரிந்துள்ளது. ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக விளங்குவது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட் களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும், பாசனத்திற்காக அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. சனியன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.84 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு விநாடி 1,162 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில்,காளிங்கராயன் பாசனத் திற்கு 500 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானி சாகர் அணையை தொடர்ந்து மற்ற அணை களின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வரு கிறது. குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.83 அடி யாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர் மட்டம் 13.61 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.19 அடியாகவும் உள்ளது.