districts

img

இடிக்கப்பட்ட மாட்டிறைச்சி கடையை கட்டித்தரக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச.26- புன்செய் புளியம்பட்டி யில் இடிக்கப்பட்ட மாட்டி றைச்சி கடையை, அதே இடத் தில் கட்டித்தரக்கோரி மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், புன் செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் சந்தையில் செயல் பட்டு வந்த மாட்டிறைச்சி கடையை இடித்து அகற்றியது. இதுகுறித்த போராட்ட அறிவிப் பைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் 3 மாதங்க ளுக்குள் தீர்மானம் நிறைவேற்றி அதே இடத் தில் கடைகள் கட்டித் தரப்படும் என உறுதி யளித்தது. ஆனால், அதுவரை கடைகள் செயல்பட இடமளிக்கவில்லை. இந்நிலை யில், அதே இடத்தில் கடைகள் கட்டித்தர வேண்டும். அதுவரை கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண் டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை இணைந்து புளியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய  செயலாளர் டி.சுப்பிரமணி தலைமை வகித் தார். இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமத்து, தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மாவட்ட தலைவர் பி.பி.பழனி சாமி, ஏ.பி.ராஜூ, ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பி.என்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.