இராமநாதபுரம், பிப்.26- இராமநாதபுரத்தில் பட்டியலின வாலிபரை சாதியைச் சொல்லித் திட்டி கொடூரமாக தாக்கிய சாதி ஆதிக்கச்சக்தியினரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண் டித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் வான் தமிழ் இளம் பரிதி. மாவட்டச் செயலாளர் என்.கலையரசன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: இராமநாதபுரம் மாவட்டம் திரு வாடானை வட்டம் நெட்டேந்தல் கிரா மத்தைச் சேர்ந்தவர் அழகன் மகன் ஜீவா. பிப்ரவரி 18 அன்று சிறுகை கிரா மத்தில் நடந்த திருவிழாவிற்கு சென்ற போது அம்மனை கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரை சீர்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் தாக்கிவிட்டார் என்று ஜீவாவிடம் கூறியுள்ளனர். இதையடுத்து ஜீவா, பிப்ரவரி 19 அன்று தனது சித்தப்பா பால்ராஜ், தினேஷ் ஆகியோருடன் சீர்தாங்கி கிராமத்தில் ஹரியை பார்த்து பேசுவதற்காக சென்றனர். அப்போது ஹரி மற்றும் ராம்கி, கதிர் ஆகியோர் சேர்ந்து ஜீவா மற்றும் அவருடன் வந்தவர்களை சாதியைச் சொல்லி இழிவாகத்திட்டி தாக்கி விரட்டினர். பின்னர் ஊருக்குவரும் வழியில் புளியால் பள்ளி அருகே ராம்கி. கதிர். ஹரியுடன் மேலும் முருகேசன .சஞ்சய். கோழிக்கடை ஆறுமுகம், மாதவன் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் ஜீவா உள்ளிட்டோரை வழிமறித்து, தாக்கி வேட்டி சட்டைகளை கிழித்த னர். முகத்தில் சிறுநீர் கழித்து அவ மானப்படுத்தினர். தாக்கப்பட்ட ஜீவா வின் உறவினர் ஒருவர் , தாக்கிய சாதி ஆதிக்கச் சக்தியினரின் ஒவ்வொ ருவர் காலிலும் விழுந்து கெஞ்சிய பிறகே விட்டுச் சென்றனர். உறவி னர்கள் மூலம் 108-க்கு போன் செய்து தேவகோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார் . ஆனால் சம்பவம் நடந்தது சிவ கங்கை மாவட்டமா? ராமநாதபுரம் மாவட்டமா? என்று திருவாடானை காவல்துறையும் தேவகோட்டை காவல்துறையும் வழக்கை பதி யாமலேயே தாமதப்படுத்தினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிட்ட பிறகே பிப்ரவரி 24 அன்று வழக்கு பதிவு செய்தனர். தாக்குதலுக்குள்ளாகிய ஜீவா மற்றும் அவரது உறவினர்கள் சிலர் மீதும் வழக்கு தொடுத்துள்ள அநீதியும் நடந்துள்ளது. காவல் துறையின் இந்த செயல் கண்டிக் கத்தக்கது. உடனடியாக சம்பந்தப் பட்ட அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும். ஜீவா மற்றும் உறவினர்கள் மீதான பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். நெட்டேந்தல் கிராமத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா ளர் என். கலையரசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ. நாகநாதன்,ஆர்.சேதுராமு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா ளர் கே.ஜெயகாந்தன் தாலுகாக்குழு உறுப்பினர் அருள்சாமி ஆகி யோர் சென்று தாக்கப்பட்ட ஜீவா குடும்பத்தினரை சந்தித்து நடந்த விபரங்களை கேட்டறிந்தனர். அவர் களுக்கு ஆறுதல் கூறி தைரியப் படுத்தி நடவடிக்கை எடுக்கச் செய்வதாக உறுதியளித்தனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ள னர்.