இராமநாதபுரம், பிப். 23 - இலங்கைக் கடற்படையைக் கண்டித்து கடந்த 7 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டு வரும் நிலையில், இராமேஸ் வரம் மீனவர்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவங்குகின்றனர்.
இதுவரை 3 தமிழக மீனவர்க ளுக்கு இலங்கை அரசு சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், இராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் வியாழனன்று அனைத்து விசைப்படகு மீனவர்களின் ஆலோச னைக் கூட்டம் சங்கத் தலைவர் ஜேசு தலைமையில் நடந்தது.
இதில், இலங்கை அரசு விதித் துள்ள புதிய தண்டனை சட்டத்தை நிறுத்த வேண்டும்; சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; இலங்கை அரசால் விடு விக்கப்பட்ட விசைப் படகுகளை ஒன்றிய அரசு அரசு மீட்டுத் தர வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி 24 அன்று தங்கச்சிமடத்தில் அனைத்து மீனவர் சங்கங்கள் சார்பிலும் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட் டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
முன்னதாக, கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திரு விழாவை புறக்கணித்த மீனவர்கள், கச்சத்தீவுக்கு தங்களின் படகுகளை இயக்கவில்லை. இதனால், கச்சத் தீவில் பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்தியா தரப்பில் இருந்து பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இத னால் கச்சத்தீவு திருவிழா வெறிச் சோடியது.