இராமநாதபுரம், ஜூன் 21- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் இராமேஸ்வரம் தாலுகா மாநாடு க. வெங்கடேஸ்வரி தலை மையில் நடைபெற்றது. சகாயம் வரவேற்றார் .மாநிலச் செயலாளர் சசிகலா துவக்கி வைத்துப் பேசினார்.மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணகி நிறைவு செய்து பேசினார்.சகோதர சங்க நிர்வாகிகள் ராமச்சந்திர பாபு, கார்த்தி, வில்லியம் ஜாய்சி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் தலைவராக க.வெங்கடேஸ்வரி, செயலா ளராக ஆரோக்கிய நிர்மலா , பொருளாளராக சுமதி உள் ளிட்ட 13 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட் டது. இராமேஸ்வரம் நகர் பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ,இராமேஸ்வரம் வட காடு பகுதியில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட மீனவப் பெண் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.