இராமநாதபுரம், ஜன.29- கச்சதீவு அந்தோணியார் ஆலய திரு விழாவிற்கு தமிழக பக்தர்களையும் அனு மதிக்க ஒன்றிய அரசு, இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கச்சதீவு அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் மாதம் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறும் எனவும் இதில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்ட 500 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கு வதாகவும், இந்திய பக்தர்களுக்கு இம் முறையும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலய வரு டாந்திர திருவிழாவில், தமிழக மீனவர்கள் உள்பட பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டுமென மீனவர் சங்கங்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். கொரோனா பேரிடர் நிலைமை கார ணமாக குறைவான பக்தர்களுக்கு அனு மதி வழங்குவதாக இருந்தால் அதில் தமி ழக பக்தர்களையும் இணைத்து குறைவான அளவிலாவது தமிழக பக்தர்களும் இடம் பெற உரிய அனுமதியை பெற்று தர ஒன்றிய அரசு, இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.