districts

img

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம்,ஜூன் 9- சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி வரையறுக்கப் பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரியும்,  பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அறிவிக்க கோரியும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். செயலாளர் முத்து வெள்ளையப்பன் தலைமை வகித்  தார்.  விருதுநகர் மாவட்ட சிஐடியு துணைத்  தலைவர் கணேசன் துவக்க உரை யாற்றினார். தோழமைச் சங்க நிர்வாகி கள் ராஜ்குமார், கருமலை, ராஜகுரு ஆகி யோர் ஆதரித்துப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலமுருகன் நிறை வுரையாற்றினார்.