அரியலூர். ஏப்.28- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ள விழப் பள்ளம் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா வை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் அரியலூர், பெரம்ப லூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600 காளைகள் கலந்து கொண் டன. சுமார் 200 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில், காளைகளை அடக்கிய வீரர்க ளுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் குத்து விளக்கு, சைக்கிள், தங்க நாண யங்கள் உள்ளிட்ட பல்வேறு பரி சுப் பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியின் போது காய மடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.