அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்வாரிய அலுவலக வளாகத்தை புதனன்று தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், வெள்ளியன்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில், மின்வாரிய பொறியாளர்கள், ஜெயங்கொண்டம் நகர் மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், நகர் மன்ற துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.