districts

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 15 ஆண்டு சிறை

அரியலூர், மார்ச் 4 - அரியலூர் மாவட்டம் முன்னூரான்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைபிள்ளை. இவர் 11 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பிச்சைப்பிள்ளையை கைது செய்தார். இதுகுறித்த வழக்கு அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பில் நீதிபதி ஆனந்தன், குற்றவாளி பிச்சைப்பிள்ளைக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை என  தீர்ப்பு வழங்கினார்.