districts

img

பேருந்து நிலையம் அருகே சாக்கடை கடும் துர்நாற்றம்: பயணிகள் அவதி

அரியலூர், ஜூன் 27 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் கட்டப்பட்டு சமீபத்தில் காணொலி வாயி லாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த புதிய பேருந்து நிலையம் அருகே  கட்டண கழிப்பறை உள்ளது. இந்த கழிப்ப றையில் இருந்து வெளியேறும் சிறுநீர் உள்பட கழிப்பறை நீர் அனைத்தும் அந்த கட்டிடத்துக்கு வலதுபுறத்தில் பெரிய அள வில் பரவலாக குழியாக்கப்பட்டுள்ள சாக்கடை குழியில் விழுகிறது. இந்த கழிவுநீர்  அப்படியே தேங்கி நிற்பதால், அதில் புழு, பூச்சிகள், விஷக்கிருமிகள் நிறைந்து கடும் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள், குழந்தைகள், மாணவர்கள் என பயணிகள் அவ்வழியாக செல்லும் போது  துர்நாற்றத்தை பொறுக்க முடியாமல் மூக்கை  மூடிக் கொண்டே சென்று வரும் சூழல் உள்ளது. இதே நிலை நீடித்தால் பேருந்து  நிலையத்திற்கு வந்து செல்லும் பொதுமக்க ளுக்கு விரைவில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.  எனவே சாக்கடையின் கழிவுநீரை பேருந்து நிலையத்தை விட்டு அப்புறப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.