அரியலூர், பிப்.4- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ள இருகையூர் ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்காததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இருகையூர் ஊராட்சியில் வியாழனன்று 9வது வார்டு மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படுவதாக கூறியிருந்த நிலையில், அவர்கள் வேலை நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், வேலை மாற்று இடத்தில் நடை பெற்று வருவதால் இவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஏன் வேலை இன்னும் வழங்கவில்லை என பொதுமக்கள் கேட்டபோது, இன்று வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புள்ளி விவரங்கள் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுவிட்டது ஆகை யால் உங்களுக்கு வேலை இல்லை எனக் கூறி அனுப்பி யுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரியலூர்- ஜெயங் கொண்டம், கும்பகோணம் சாலையில் இருகையூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தா.பழூர் காவல் துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், குணசேகரன் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.