districts

img

ஆபாச படங்களை காட்டி 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் – ரயில் நிலைய மாஸ்டர் கைது  

அரியலூரில் 12 வயது சிறுமியிடம் ஆபாச படங்களை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ரயில் நிலைய மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.  

அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவிலில் 12 வயது சிறுமியிடம், ஆபாச படங்களை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ரயில் நிலைய மாஸ்டரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அய்யனார் கோவில் பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியிடம் ஸ்டேஷன் மாஸ்டர் சாகர் நாஹக் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் சாகர் நாஹக்கை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

;