அரியலூர், ஜன.28- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரம் மாடர்ன் கல்லூ ரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடை பெற்றது. முகாமை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், ‘‘ஈரோடு கிழக்கு தொகுதி யில் திமுக கூட்டணி வேட் பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து விரைவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். நாட்டில் பாஜகவால் முன்னெடுக்கப்பட்டு வரும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து குரல் எழுப்பு வோம். நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்து வோம்’’ என தெரிவித்தார். முன்னதாக திருச்சி மண்டல வேலை வாய்ப்பு இணை இயக்குநர் சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஜெயங்கொண் டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் முன்னிலை வகித்தார். சிதம்பரம் நாடாளு மன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.