districts

விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞருக்கு நெஞ்சுவலி

அரியலூர், ஏப்.9 -  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டத்தை அடுத்த மீன்சுருட்டி அருகே உள்ள சுத்துக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனி வாசன். இவரது மகன் ராபின் (25). இவர்  சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில்  வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராபின் மீன்சுருட்டி அருகே உள்ள வெண் ணங்குழி கிராமத்தில், தன் உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.  அந்த சமயத்தில் வியாழனன்று அங்கு வந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார் ராபினை  அதிகாலை 4 மணி அளவில் கைது செய்து  காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ள னர். அப்போது ஜெயங்கொண்டம் தாசில் தாரை தாக்கிய வழக்கில், அவருடைய உறவி னர் இருப்பதாகவும் அவரிடம் விசாரணை செய்ய வேண்டும். அதற்காகத்தான் உன்னை  அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் தரப்பில், ராபினிற்கு அன்று முழுவதும் உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் தனக்கு எந்த சம்மந்தமும் இல்லை எனவும், சம்மந்தம் இல்லாத வழக்கை ஏன்  என்னிடம் கேட்கிறீர்கள் என ராபின் தெரி வித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்த ராபினுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் மீட்டு மீன்சுருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கும்ப கோணம் தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.  இதற்கு முன்பு இந்த வழக்கில் சம்பந்த மில்லாத கமலக்கண்ணன் என்பவர், போலீசா ரின் தொந்தரவால் மன உளைச்சலுக்கு ஆளாகி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத் தக்கது.