அரியலூர் மாவட்டம் குண்டவெளி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன, இப்புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.