அரியலூர் மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க தூய்மை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விழிப்புணர்வு உறுதிமொழியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் வாசித்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை வகித்தார். ஊர்வலமானது பேருந்து நிலையத்தில் தொடங்கி, திருச்சி சாலை வழியாக சென்று அண்ணாசிலையில் முடிவடைந்தது.