அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகாவில் பல்வேறு துறைகளின் சார்பில் குமிழியம், வீராக்கன், பிலாக்குறிச்சி, செந்துறை உள்ளிட்ட ஊராட்சிகளில் ரேசன் கடை, அங்கன்வாடி கட்டிடம், தார்ச்சாலை அமைத்தல், சிமெண்ட் சாலை அமைத்தல், கதிர் அடிக்கும் களம் ஏரிகளை தூர்வாருதல் உள்ளிட்ட திட்டப் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர், பிலாக்குறிச்சியிலிருந்து ஜெயங்கொண்டம் வரையிலான புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்து சேவையையும் தொடங்கி வைத்தார்.