அரியலூர், ஏப்.28- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குருவாலப்பர் கோவிலில் தமிழர் நீதி கட்சி சார்பில் தமிழ் மக்கள் பண்பாட்டு கலை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழர் நீதி கட்சி நிறுவன தலைவர் ஏர் உழவர் சங்க நிறுவனருமான சுபா இளவரசன் தலைமை தாங்கினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் பாக்கியராஜ், மாவட்ட அமைப்பாளர் செங்குட்டுவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரவி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தமிழர் நீதிக் கட்சி செய்தி தொடர்பாளர் மணிவண்ணன் வர வேற்று பேசினார். தலைமை நிலைய செயலா ளர் மதியழகன் நன்றி கூறினார். விழாவில் பழ.நெடுமாறன் பேசுகையில், ‘‘தமிழக ஆளுநர் அரசியல் சட்ட வரம்பை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். நமது மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் துறை தலைவர் களை பேராசிரியர்கள் எல்லோரையும் அழைத்து ஒரு மாநாடு நடத்துகிறார். மாநாட்டிற்கு முதலமைச்சர் மற்றும் உயர் கல்வித் துறை அதிகாரிகள் அழைக்கப்பட வில்லை. ஆளுநர் அரசியல் சட்டத்தை மீறி செயல்படுவது கண்டிக்கத்தக்கது. அதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பழநெடு மாறன் கோரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய பாஜக அரசில் தூண்டுதலினாலே ஆளுநர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என கூறினார்.