districts

img

அரசு புகைப்படக் கண்காட்சி தொடக்கம்

அரியலூர், ஜன.21- அரியலூரில் 10 நாள்கள்  நடைபெறும் அரசின் சாத னைகள் மற்றும் திட்டங்கள்  குறித்த புகைப்படக் கண்காட்சி காமராஜர் ஒற்று மைத் திடலில் சனிக்கிழமை தொடங்கியது. போக்குவரத்து துறை  அமைச்சர் சா.சி.சிவ சங்கர் கண்காட்சியை தொடக்கி வைத்தார். மாவட்ட கண்காணிப்பு அலு வலர் ரமேஷ் சந்த் மீனா,  மாவட்ட ஆட்சியர் பெ.ரமண  சரஸ்வதி, சட்டப் பேரவை  உறுப்பினர்கள் அரியலூர்  கு.சின்னப்பா, ஜெயங் கொண்டம் க.சொ.க. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 10 பயனா ளிகளுக்கு ரூ.56.250 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங் கினார்.