districts

செவித்திறன் குறையுடையோருக்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து

அரியலூர், டிச.4- செவித்திறன் குறையுடையோருக்கான 3-ஆவது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில், அரியலூர் மாவட்ட காதுகேளாதோர் சங்கம் சார்பில் ஹெலன் கெல்லர் செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்கள் 13 பேர் கலந்து கொண்டனர்.  போட்டிகளில் 18-வயதிற்குட்பட்டோர் பிரிவில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கமும், ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும், 16-வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போட்டிகளில் தங்கப் பதக்கமும், ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும், 14-வயதிற்குட்பட்ட பிரிவில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இதையடுத்து வெற்றிபெற்ற மாணவர்கள் அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.  நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்ட காதுகேளாதோர் சங்கத் தலைவர் சின்னப்பா மற்றும் ஹெலன் கெல்லர் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

;