அரியலூர், ஜன. 7 - தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீ கரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பதி னொன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி., படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில் நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லா மிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங் களை சார்ந்த மாணவ, மாண வியர்களிடமிருந்து 2021-2022 ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசின் பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப் பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப் பங்களை www.scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 15.1.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. தகுதி வாய்ந்த சிறுபான் மையின மாணவ, மாணவி யர்கள் மேற்படி காலகெடு விற்குள் விண்ணப்பித்து பய னடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அனைத்து கல்வி நிலையங்களும் சிறுபான் மையினர் கல்வி உதவித் தொகை கோரி மாணவ-மாணவியர்களிடமிருந்து வரப் பெற்ற விண்ணப்பங் களை குறிப்பிட்ட காலக்கெடு விற்குள் தேசிய கல்வி உத வித்தொகை இணையத்தில் சரிபார்க்க வேண்டும். தகுதி யுள்ள சிறுபான்மையின மாணவ, மாணவி யரின் விண்ணப்பத்தினை சரி பார்ப்பதில் சுணக்கம் காட்டும், தவறும் கல்வி நிலையங்களின் மீது அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறி வுறுத்தப்படுகிறது. மேலும் கூடுதல் விவ ரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலரை அணு கலாம் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.