districts

ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் நிலையை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரிக்கை

அரியலூர், மார்ச் 1 - ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் நிலை  குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை யில் குழு அமைக்க வேண்டும் என தேசிய தூய்மைப் பணியாளர்கள் நல ஆணைய தலைவர் வலியுறுத்தியுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை யின் சார்பில்  தேசிய தூய்மைப் பணியா ளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன்  தலைமையில் தூய்மை பணியாளர்கள் நலத் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணி யாளர்கள் மற்றும் நிரந்தர தூய்மைப் பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.  பணியின் போது ஏற்படக் கூடிய பிரச்சனை கள், ஊதிய முரண்பாடுகள் மற்றும் மருத்துவ  காப்பீடு விபத்து காப்பீடு உள்ளிட்ட விவரங் கள் குறித்து தூய்மைப் பணியாளர்களிடம், தேசிய தூய்மைப் பணியாளர்கள் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் கேட்டறிந் தார். அவர்களுக்கான பிரச்சனைகளை உடனே நிவர்த்தி செய்யவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தலைவர் வெங்கடேசன் பேசுகையில், ஒப்பந்த தூய்மை  பணியாளர்களுக்கு 10 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில்  மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை ஒழிக்க ஒன்றிய - மாநில அரசுகள் சார்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் கழிவு களை அகற்றும் இயந்திரங்கள் வாங்க மானி யத்துடன் கூடிய கடன் வசதிகள் அளிக்கப் பட்டு வருகிறது.

தனியாக தூய்மை பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு ஒன்றிய அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள  வேண்டும். அதுகுறித்து தூய்மை பணியா ளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தூய்மைப் பணியாளர்களின் நிலையை ஆரா யும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமை யில் குழு அமைக்க தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும்.  ஒப்பந்தகாரர்களின் லாப நோக்கத்தில் செயல்பட்டு வரும் ஒப்பந்தத் தொழிலாளர் கள் முறையை அகற்ற தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு விபத்து காப்பீடு இன்சூரன்ஸ் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண் டும். தேசிய தூய்மைப் பணியாளர்கள் நல  ஆணையம் போன்று மாநில அளவில் தூய்மைப் பணியாளர் நல ஆணையத்தை அமைக்க வேண்டும். தூய்மைப் பணியாளர் கள் புகார் தரும் வகையில் தேசிய அளவில்  10422 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்  உள்ளது. இதுபோன்றே மாநில அளவிலான புகார் எண்ணை ஏற்படுத்த வேண்டும்.  தூய்மைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்திற்கான மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் அனைவரை யும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்க  நகராட்சி, பேரூராட்சி ஆணையர்கள் மற்றும்  ஒப்பந்தக்காரர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரமண  சரஸ்வதி மற்றும் ஆணையர்கள், ஒப்பந்தக்கா ரர்கள், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கள் கலந்து கொண்டனர்.