districts

பேருந்தில் இடம் இல்லாததால் படியில் பயணம் செய்த மாணவர் தவறி விழுந்து உயிரிழப்பு

கும்பகோணம், மே 4 -  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் சேர்ந்த மங்கலம் பகுதியைச் சேர்ந்த மாணவர் சதீஷ்குமார் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு  இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை படித்து வந்தார். இந்நிலையில் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஜெயங்கொண்டம் அரசு  பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படியில் நின்றவாறுசென்ற போது பேருந்து நிலையம் அருகே 60 அடி சாலையில் பேருந்து  திரும்பும் போது, சாலையின் நடுவே மின்கம்பத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்ப ரப் பலகையில் மோதி நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். கும்பகோணம் மேற்கு காவல் நிலை போலீ சார் விபத்துக் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இதனிடையே கல்லூரி மாண வர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு கவனக்குறைவாக பேருந்தை ஓட்டிய ஓட்டு நரை கைது செய்யக் கோரி சாலை மறியலில்  ஈடுபட்டனர். காவல்துறையினர் கல்லூரி மாணவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை  நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரபாகரன் கூறுகையில், கும்பகோ ணத்திலிருந்து ஜெயங்கொண்டம் பகுதிக்கு செல்ல போதுமான பேருந்து வசதி இல்லை.  இதனால் படியில் பயணித்து மரணமடைந்த மாணவர் சதீஷ்குமார் குடும்பத்திற்கு ரூ.10  லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கும்பகோணம் முதல் ஜெயங்கொண்டம் வரை பேருந்துகளை கூடுதலாக இயக்கிட வேண்டும். மாணவர் சங்கத்தின் கோரிக் கைகளை அரசு தாமதமின்றி நிறைவேற்றிட வேண்டும் என தெரிவித்தார்.