அரியலூர், ஜன.22- தஞ்சாவூர் மாவட்டம் திரு மண்டங்குடி திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளின் பெயரில் முறைகேடாக வாங்கிய ரூ.350 கோடியை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலு வைத் தொகையை உடனடி யாக வழங்க வேண்டும். இந்தப் பிரச்சனையில் தமிழக அரசு உடனடி யாகத் தலையிட்டு விவசா யிகளைக் காப்பாற்ற வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். விவ சாயிகளின் கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவ சாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ரா. மணிவேல் தலைமை வகித் தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே ஸ்டேட் வங்கி யின் முன்பு நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொரு ளாளரும், கரும்பு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட தலைவருமான சக்திவேல், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளரும், கரும்பு விவ சாயிகள் சங்க மாநில செய லாளருமான ஏ.கே.ராஜேந் திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
முசிறி
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவ சாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் பி.இராம நாதன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் சிறப்புரை யாற்றினர்.