அரியலூர், மார்ச் 25- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் கூவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகர்பாளையம் கிராமத்தில் புண்ணிய மூர்த்தி (60) என்பவர் தனது மனைவி ராஜேஸ்வரி 3 மகன்கள், 1 மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஆதிதிராவிடர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு, மீத முள்ள காலி இடத்தில் வீடு அமைத்து கடந்த 40 ஆண்டு களாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், இடம் ஆக்கிரமிப்பு என கூறி மாற்று இடம் கூட வழங்கா மல், புண்ணியமூர்த்தியின் வீட்டை வருவாய் துறை யினர் இடித்தனர். இது குறித்து வருவாய் துறையின ரிடம் கால அவகாசம் கேட் டும் மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும் குடும்பத்து டன் கண்ணீர் மல்க போரா டினர். ஆனால், அதிகாரிகள் தங்களது கடமையை சிறப்பாக செய்தனர்.
சிபிஎம் தலையீடு
இதுகுறித்து தகவல றிந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆண்டிமடம் வட்டச் செயலாளர் வி.பரம சிவம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி கால அவ காசம் கோரினர். ஆனால், அதிகாரிகள் கால அவகாசம் தர இயலாது என மறுத்து விட்டனர். இதையடுத்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என அதி காரிகளிடம் கேட்டுகொண்ட னர். இதன் அடிப்படையில், பட்டா வழங்க அதிகாரிகளி டம் ஆலோசித்து உரிய நட வடிக்கை எடுப்பதாக தெரி வித்தனர்.