அரியலூர், நவ. 6- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் சின்னவளையம், செங்குந்த புரம், மேலக்குடியிருப்பு, கீழக்குடியிருப்பு, வேலாயுதநகர், கரடிகுளம், கொம்மேடு உட்பட 21 வார்டுகள் உள்ளன. இங்கு ஜெயங்கொண்டம் நகராட்சியில் நிரந்தரப் பணியாளர்கள் 21 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் மொத்தம் 134 பேர் என மொத்தம் 155 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் வார்டு ஒன்றுக்கு முன்பு 7 பேர் பணி செய்த இடங்களில், தற்போது இரண்டு சிறிய பேட்டரி வாகன மும், தலா ஒவ்வொரு வாகனத்திற்கும் தூய்மை பணியாளர்கள் 2 பேர் வீடு வீடாகச் சென்று, மக்கும் குப்பைகள், மக்காத குப்பை என சேகரிக்கின்றனர். இப்பணியில் ஈடுபட நகராட்சி நிர்வாகத்தி னர் உத்தரவிட்டதாக கூறி, ஒப்பந்த பணி யாளர்கள் 134 பேரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கிடைக்கும் குப்பைகளை மட்டுமே கொண்டு வர முடியும். அவற்றை அளவீடு செய்யக்கூடாது. மேலும், கடந்த 8 வருடமாக ரூ.242 மட்டுமே ஊதியமாக வழங்கப்படு கிறது. பாதுகாப்பு உபகரணங்களான கை யுறை, சீருடை, பெருக்குவதற்கு துடைப்ப மும் ஆகியவற்றை வழங்காமல் அலைக்கழிக் கின்றனர். ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்தி தர வேண்டும் என கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஞாயிறன்று ஜெயங்கொண் டம் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரி கள் யாரும் வரவில்லை. எனவே இதுகுறித்து திங்கட்கிழமை ஆலோசித்து, உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. பின்பு, பணியாளர்கள் போராட்டத்தை கை விட்டனர்.