districts

கங்கை கொண்ட சோழபுரத்தில் நாளை அன்னாபிஷேக விழா துவக்கம் முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்

அரியலூர், நவ.5 - கங்கைகொண்ட சோழபுரத்தில் ஐப்பசி  மாதம் பௌர்ணமி தினத்தன்று ஒவ்வொரு  வருடமும் அன்னாபிஷேக விழா நடைபெ றும். இந்த ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி  நடைபெற உள்ள அன்னாபிஷேக விழாவை  முன்னிட்டு உடையார்பாளையம் கோட்டாட் சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரி மளம் தலைமை வகித்தார். ஜெயங்கொண் டம் தாசில்தார் துரை முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் இந்துசமய அறநிலையத்துறை கோவில் செயல்அலுவலர்  செந்தமிழ் செல்வி, அன்னாபிஷேக கமிட்டி உறுப்பி னர்கள் உட்பட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை ஆர்டிஓ வழங்கி னார். டிஎஸ்பி தலைமையில் சட்டம்-ஒழுங்கு  அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு போலீசா ரின் பாதுகாப்பு பணிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், அவசரகால ஊர்தி, சுகாதார  மருத்துவம் ஆகியன தயார்நிலையில் இருக்க வேண்டும். விழாவின் போது, கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அணைக்கரை, மீன்சுருட்டி, காட்டுமன்னார்குடி, ஜெயங் கொண்டம், செந்துறை பகுதியிலிருந்து ஏராளமான மக்கள் வருவர். அவர்களின் வசதிக்காக, போக்குவரத்து சார்பில் சிறப்பு பேருந்துகள் அதிகம் இயக்கப் பட வேண்டும். வட்டார வளர்ச்சித்துறை, நக ராட்சி சார்பில் கங்கைகொண்ட சோழ புரத்தில் தற்காலிக கழிப்பறைகள் மற்றும் சுகாதாரமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தீத்தடுப்பு சாதனங்களுடன் 2  நாட்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மின்சார வாரியத்தினர் 2 நாட்களும் கங்கைகொண்ட சோழபுரம் பகுதிக்கு தடையின்றி மின்சாரத்தை விநியோகம் செய்ய வேண்டும். கோவில் உள்ளே செல்வ தற்கு அன்னாபிஷேக கமிட்டி உறுப்பினர் களுக்கான பேட்ஜ் (அடையாள அட்டை) வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.