districts

img

பட்டியலின மக்களுக்கு சொந்தமான பஞ்சம நிலங்களை மீட்டுத் தர வேண்டும்

அரியலூர், ஜன.24- அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட 6 ஆவது மாநாடு குருவாலப்பர் கோயிலில் ஏ.சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற் றது. மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் வேலை அறிக்கை வாசித்தார். மாநி லக் குழு உறுப்பினர் இளங்  கோவன் தொடக்க உரை யாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர்கள ஸ்டாலின், கலைமணி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் மணிவேல், மாதர் சங்க மாவட்டத் தலை வர் பத்மாவதி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்தி ரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டத்தின் புதிய தலைவராக பி.ரமேஷ், செய லாளராக ஏ.கந்தசாமி, பொரு ளாளராக சங்குபாலன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர்.  நூறு நாள் வேலை திட்  டத்தை 200 நாட்களாக உயர்த்தி, தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். நகர்ப்புற வேலை திட்டத்தை அனைத்து பேரூராட்சிகளி லும் முழுமையாக அமல்படுத்த, முதல் தவணையாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  மாவட்டத்  தில் உள்ள பட்டியலின மக்க ளுக்கு சொந்தமான பல்லாயி ரக்கணக்கான பஞ்சம நிலங்களை கையகப்படுத்தி பஞ்சமர்களுக்கு வழங்க வேண்டும். திருமானூர் ஒன்றியம் அழகியமணவாளன் பஞ்சா யத்துக்கு உட்பட்ட கீழராம நல்லூர் பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வும், கீழவரப்பனகுறிச்சி பகு தியில் பேருந்து நிறுத்தம், சாக்கடை வசதி, கொள்ளி டம் ஆற்றுக்கு அப்பால் நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும். ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதி மக்க ளின் பொது பயன்பாட்டிற்கு இலவச நவீன கழிப்பிட வசதி  செய்து தர வேண்டும். கொல்லா புரம் பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண் டும். பஞ்சம நிலத்தை தனி நபர்களுக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளதை மீட்டு, உடனடியாக பொதுமக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பட்டா போட்டுக் கொடுத்த அதிகாரிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.