அரியலூர், ஜன.10 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரம் பகுதி யில் ஜெயங்கொண்டம் -விருத்தாசலம் செல்லும் சாலையில், சாலையோரம் உள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. வாய்க்கால் போல் ஓடி அப்பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் பாய்கிறது. மேலும் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி யுள்ளது. இதனால் தண்ணீ ரில் இறந்து கிடக்கும் புழு, பூச்சிகள் மீண்டும் குழாய்க் குள் செல்லும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் மூலம் பெறப் படும் தண்ணீரை குடிக்கும் மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து பொது மக்கள் அச்சமின்றி குடிநீரை பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.