districts

img

ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா?

அரியலூர், செப்.24 - ஏழைகளின் உயிரை காக்க ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம்  உயர்த்த வேண்டும் என  இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா பகுதி  மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால் நடை வளர்ப்பு. இப்பகுதி யில் முந்திரி, கடலை உள்ளிட்டவை அதிக அள வில் பயிரிடப்பட்டு வரு கின்றன.  இந்நிலையில் வயலுக்கு  கூலி வேலைக்கு செல்பவர் களையும், வயலின் உரிமை யாளர்களையும், பொது மக்களையும் அவ்வப்போது பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் கடித்து விடு கின்றன. அவர்களை காப்பாற் றுவதற்காக, அப்பகுதி மக்கள் உடனடியாக அருகே  உள்ள ஆண்டிமடம் ஆரம்ப  சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் அங்கு விஷக்கடி களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான உப கரணங்கள் ஏதும் இல்லை.  இதையடுத்து அவர் களை காப்பாற்ற வேண்டும்  என்றால், சுமார் 15 கி. மீட்டர் தொலைவில் உள்ள  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு  செல்லும் நிலை உள்ளது. இதில் காலதாமதம் ஏற்படுவ தால், பாதிக்கப்பட்டவர் களுக்கு உடல் முழுவதும் விஷம் ஏறி அவர்கள் கொண்டு செல்லும் வழியி லேயே உயிரிழந்து விடு கின்றனர். இதனால் இப்பகு தியில் விஷ ஜந்துகளால் அதிகம் பேர் உயிரிழக்கின்றனர். நாய்கடிக்குகூட மருந்து இல்லாத சூழல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப் பட்டு வருகின்றனர். மேலும் கர்ப்பிணிகளுக்கு ஆண்டிமடம் ஆரம்ப சுகா தார நிலையத்தில் அறுவை  சிகிச்சை செய்வதற்கான வசதிகள் இல்லை. அவர் களுக்கு பிரசவ வலி ஏற் பட்டால் ஜெயங்கொண் டம் அரசு மருத்துவமனைக்குத் தான் கொண்டு செல்ல வேண்டும். தினமும் ஏராள மான நோயாளிகள் இந்த  அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.  

இதுகுறித்து சிகிச் சைக்கு வந்த பொதுமக்க ளிடம் கேட்ட போது, “ஆண்டிமடம் ஆரம்ப சுகா தார நிலையத்தில் பணி யாற்றும் மருத்து வர்களுக்கான குடியிருப்பு பாழடைந்த நிலையில் பய னற்று காணப்படுகிறது. ஆண்டிமடம் சுற்றுப் பகுதியை சேர்ந்த மக்கள் பெரும்பாலானோர் கூலி தொழிலாளிகள் என்பதால், எங்களால் தனியார் மருத்து வமனைக்கு சென்று சிகிச்சை பெற இயலாது. தற்போது இந்த மருத்துவ மனையில் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் நாங்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த ஆரம்ப சுகா தார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தினால் இப்பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள்” என்றனர்.

;