districts

img

அண்ணாமலை பல்கலை. மாணவர்கள்  மீன்சுருட்டி அரசு பள்ளியில் ஆய்வு

அரியலூர், நவ.24- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  உள்ள மீன்சுருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயி லும் மாணவர்கள் வெளிப்புற பயிற்சி வகுப்பை தூய்மை  இந்தியா பாரதம் என்ற பயிற்சி வகுப்பை பல்கலைக் கழக பேராசிரியர் பாலமுருகன் தலைமையில் மேற்  கொண்டு வருகின்றனர். இதில் பல்கலைக் கழகத்தில் எம்ஏ, எம்எஸ்சி மாணவ,  மாணவிகள் சுமார் 50 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.  இதனை முன்னிட்டு மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளியில் சுற்றுப்புற தூய்மை மற்றும் விளை யாட்டு மைதானங்கள், கழிப்பறைகள், சமையல் கூடங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து என்னென்ன முறையில்  பயன்படுத்துகின்றனர். எந்த அளவுக்கு தூய்மையாக வும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கின்றது என்  பது குறித்து கட்டுரை தயார் செய்து வருகின்றனர்.