districts

img

காலியிடங்களை நிரப்பக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், மார்ச் 30- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 10 குழந்தை களுக்கு குறைவாக உள்ள பிர தான மையங்களை சிறிய மைய மாக்குவதையும், 5 குழந்தைகளு க்கு குறைவாக உள்ள மையங்க ளை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் அண்ணாசிலை அருகே மாவட்டப் பொருளாளர் பி.ஜோதிலட்சுமியும், ஜெயங் கொண்டம் காந்தி பூங்கா அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.ராஜாமணியும், செந்துறையில் மாவட்டச் செயலாளர் த.சகுந்தலா வும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலை வர் கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சிற்றம்பலம், மாவட்டச் செயலாளர் பி.துரை சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.                                                                                                                                                                                                                                        திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலை வர் அகிலா தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், சங்க மாநிலப் பொருளாளர் தேவமணி, மாவட்டப் பொருளாளர் ராணி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.