அரியலூர், ஏப்.13 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கங்கவடங்கநல்லுர் கிராமத்தில் பாண்டியன் ஏரி சர்வேக்கு உட்பட்ட பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 100 ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்ற னர். உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரில் நீர்நிலை புறம்போக்குகளை அகற்ற கூறிய தீர்ப்பில் கூறியிருப்பதற்கு மாறாக, மாற்று இடம் வழங்காமல், இந்த வீடுகளை இடிப்ப தற்கு அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகின்ற னர். இதை தடுத்து நிறுத்தி கிராம மக்களை பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட் டது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு துணை தாசில்தாரிடம் அகில இந்திய விவசா யிகள் சங்கம் மற்றும் சிபிஎம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நீர்நிலை புறம்போக்கு களை அகற்றும் முன்பாக, அப்பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். தொகுப்பு வீடு வழங்கி அரசு உதவ வேண்டும் என கோரி விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளரும், சிபிஎம் மாவட்ட செயலாளருமான எம்.இளங்கோவன், சிபிஎம் ஜெயங்கொண் டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம், விசிக மாவட்ட துணைச் செயலாளர் கதிர்வள வன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மாவதி மற்றும் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.