districts

இடி தாக்கி 2 பேர் பலி: ஒருவர் படுகாயம்

அரியலூர், ஆக.31 - அரியலூர் மாவட்டம் வாரணவாசி ஊராட்சி மல்லூர் கிரா மத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி சரோஜா.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். புதனன்று காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன்  கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் அன்பரசன் நடவு வேலையில் ஈடுபட்டி ருந்த கூலி தொழிலாளர்களுக்கு மதிய உணவு வாங்கிக் கொண்டு சென்றார். அப்போது மழையில் நடந்து செல்லும்  வழியிலேயே இடி தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்  ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு  வந்த தலைவர் ராஜேந்திரன், கீழப்பழுவூர் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வந்து அன்பர சனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பெண் பலி: ஒருவர் படுகாயம் தளவாய் கிராமத்தைச் சேர்ந்த மாலைமணி என்ற பெண்  மற்றும் ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் ஆகிய இரு வரும் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் மாடு மேய்த்துக்  கொண்டிருந்தனர். அப்போது இடி தாக்கியதில் மாலைமணி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த செல்வ ராஜ் பெண்ணாடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தளவாய் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.