districts

அரியலூரில் 69 இடங்களுக்கு 124 பேர் வேட்பு மனுதாக்கல்

அரியலூர், பிப்.4 - அரியலூர் மாவட்டத்தில் 69 பதவியிடங்களுக்கு நடை பெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வெள்ளிக்கிழமை வரை 124 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகளுக்கும், ஜெயங் கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கும், உடையார்பா ளையம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும், வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கும் என மொத்தம்  69 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற வுள்ளது. இதில் அரியலூர் நகராட்சியில் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு 20 பேரும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 22  பேரும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். உடையார்பாளையம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்  தேர்தலுக்கு 28 பேரும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 17  பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை  வரை நகர்ப்புற ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 124  பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.