districts

img

ரூ.26 ஆயிரம் ஊதியம் -விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை- வீடற்றவர்களுக்கு வீடுகள் வழங்குக!

விருதுநகர், பிப்.26- அனைத்து தொழிலாளர் களுக்கும் குறைந்தபட்ச ஊதியம்  மாதம் ரூ.26 ஆயிரமும், ஓய்வூதிய மாக ரூ.10ஆயிரமும் வழங்க வேண்  டும். மின்சார சட்ட திருத்த மசோதா  2022-ஐ திரும்பப்பெற வேண்டும். அனைவருக்கும் வேலை மற்றும்  பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை வழங்க வேண் டும். வீடற்ற அனைவருக்கும் வீடு கள் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு, அகில  இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து பிப்ரவரி 26 ஞாயி றன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபயணம் நடத்தினர். விருதுநகர் கருமாதிமடம் அருகே நடைபெற்ற நடைபய ணத்திற்கு சிஐடியு கன்வீனர் வி. சரவணன் தலைமையேற்றார். மாவட்ட உதவித் தலைவர் எம். வெள்ளைத்துரை துவக்கி வைத் தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் ராதா கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.  முடிவில் சிபிஎம் நகர் செயலா ளர் எல்.முருகன் பழைய பேருந்து  நிலையம் அருகே நிறைவுரை யாற்றினார். மேலும் இதில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். முருகேஸ்வரி, சவுந்திரபாண்டி யன் உட்பட பலர் பங்கேற்றனர். இராஜபாளையம் தெற்கு தேவ தானத்தில் நடைபெற்ற நடைபய ணத்தில் விவசாயிகள் சங்க மாநி லப் பொதுச்செயலாளர் சாமி நட ராஜன் பங்கேற்றுப் பேசினார். மத்தியசேனை முதல் ஆமத்  தூர் வரை நடைபெற்ற நடைபய ணத்திற்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் எம்.சாராள், விவசாயிகள் சங்க ஒன்  றிய செயலாளர் ரெங்கநாதன், விவ சாயத்தொழிலாளர் சங்க மாவட்  டக்குழு உறுப்பினர் கே.ராஜேந்தி ரன் ஆகியோர் தலைமையேற்றனர்.

சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.வேலுச்சாமி துவக்கி வைத்தார். சிபிஎம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்துவேலு நிறைவு செய்தார். முதலிபட்டி முதல் ஆர்.ஆர். நகர் வரை நடைபெற்ற நடைபய ணத்திற்கு விவசாயிகள் சங்க  ஒன்றிய செயலாளர் சேதுநாராயண சாமி, சங்கையா ஆகியோர் தலை மையேற்றனர்.சிஐடியு மாவட்ட நிர்வாகி எம.சி.பாண்டின் துவக்கி வைத்தார். முடிவில் தெற்கு ஒன்  றிய செயலாளர் பி.நேரு சிறப்பு ரையாற்றினார். மதுரை பேருந்து நிறுத்தம் முதல் முக்குராந்தல் வரை நடை பெற்ற நடைபயணத்திற்கு விவ சாயிகள் சங்க மாவட்ட பொருளா ளர் எஸ்.மனோஜ்குமார் தலைமை யேற்றார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட நிர்வாகி கே.ஜியகுமார், விவசாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் அ.விஜயமுரு கன், கன்வீனர் ஏ.சீனிவாசன், சிபிஎம் நகர் செயலாளர் பெத்தராஜ் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர். தாயில்பட்டியில் துவங்கிய  நடைபயணத்திற்கு பெரியசக் கரை, கண்ணபிரான், கூடலிங்கம் ஆகியோர் தலைமையேற்றனர். கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.குருசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே. சுப்பாராஜ், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் பி.ராமர், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம்.முனியசாமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். திருத்தங்கல் முதல் சிவகாசி  வரை நடைபெற்ற நடைபய ணத்திற்கு சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.முருகன், இ. பழனி ஆகியோர் தலைமையேற்ற னர். சிஐடியு மாவட்டப் பொருளா ளர் வி.ஆர்.செல்லச்சாமி துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் நகர் செயலாளர்  ஆர்.சுரேஷ்குமர், ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் விளக்கிப் பேசினர். அருப்புக்கோட்டையில் விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை தலை மையில் நடைபயணம் நடைபெற் றது. துவக்கி வைத்து சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் பி. அன்புச்செல்வன் பேசினார். சிஐ டியு மாநில துணைத் தலைவர் எம். அசோகன் நிறைவுசெய்தார். மேலும் இதில் நகர் செயலாளர் எஸ்.காத்தமுத்து, ஒன்றியச் செய லாளர் எம்.கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். காரியாபட்டி முதல் கல்குறிச்சி  வரை நடைபெற்ற நடைபய ணத்தை சிஐடியு நிர்வாகி பரம சிவம், விவசாயத்தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் பி. மலைச்சாமி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் குமராண்டி ஆகியோர் தலைமையேற்றனர். துவக்கி வைத்து சிபிஎம் வட்ட செயலாளர் ஏ.அம்மாசி பேசினார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் பேசினார். முகமது அலி ஜின்னா உட்பட பலர் பங்கேற்றனர். திருச்சுழியில் சிஐடியு நிர்வாகி சுரேஷ்குமார், விவசாயத்தொழிலா ளர் சங்க ஒன்றியத் தலைவர் பூமி நாதன், விவசாயிகள் சங்க ஒன்றி யச் செயலாளர் பெருமாள் ஆகி யோர் தலைமையேற்றனர். துவக்கி வைத்து சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.தாமஸ் பேசி னார். நிறைவு செய்து சிபிஎம்  ஒன்றிய செலாளர் மார்கண்டேயன் பேசினார். மேலும் இதில், செல்வ ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூர் நகரில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபயணம் நடைபெற்றது. சிஐ டியு மாநில துணைத்தலைவர் மகா லட்சுமி துவக்கி வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் நிறைவுரையாற்றினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொரு ளாளர் ஜோதிலட்சுமி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் வீர சதா னந்தம், மரிய டேவிட் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். கொத்தன்குளத்தில் கூட்டு றவு ஊழியர் சம்மேளன மாவட்ட  பொதுச் செயலாளர் உயிர்காத் தான் துவக்கி வைத்தார் .விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் விஜய முருகன் நிறைவு செய்து வைத்தார். அங்கன்வாடி ஊழியர்  சங்க மாவட்ட நிர்வாகி சபீனா, சிஐ டியு மாவட்ட நிர்வாகி சந்தனம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜு னன், ஒன்றிய செயலாளர் சசிகுமார்  ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னூரில் விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் சுந்த ரபாண்டியன் துவக்கி வைத்தார் .விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகன் நிறைவு  செய்து வைத்தார். சாலைப்போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் திருமலை உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இராஜபாளையம் நகரில் பொன்விழா மைதானத்தில் துவங்கிய நடை பயணத்தை சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.  அர்ஜுனன் துவக்கி வைத்தார். சிஐ டியு மாவட்ட துணைத்தலைவர் கணேசன் நிறைவு செய்து வைத்  தார். சிஐடியு கன்வீனர் சுப்பிரமணி யன், சிபிஎம் நகர செயலாளர் மாரி யப்பன் மற்றும் பலர் கலந்து கொண்  டனர். ராஜபாளையம் கிழக்கு ஒன்றி யம் எஸ். ராமலிங்கபுரத்தில் நடை  பயணத்தை துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட தலைவர் மகா லட்சுமி பேசினார். விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் சோமசுந்தரம் நிறைவுரை யாற்றினார். விசைத்தறி சங்க மாநி லக்குழு உறுப்பினர் முனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் தேவதானத்தில் நடை பயணத்தை தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் சாமி நடராஜன் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட செய லாளர் பி.என்.தேவா நிறைவுரை யாற்றினார்.